search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடிநீர், தூய்மை பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு
    X

    குடிநீர், தூய்மை பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு

    • புதுக்கோட்டை நகராட்சியில் குடிநீர், தூய்மை பணிகள் குறித்து கலெக்டர் மெர்சி ரம்யா நேரில் ஆய்வு செய்தார்
    • குடிநீர் சுத்திகரிப்பு பணிகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை நகராட்சியில், குடிநீர் மற்றும் தூய்மைப் பணிகள் குறித்து, மாவட்ட கலெக்டர்மெர்சி ரம்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.புதுக்கோட்டை வைரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அருகில், பெரியார்நகர், பூங்காநகர் ஆகிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை, அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் குடிநீர் சுத்திகரிப்பு உரிய முறையில் நடைபெறுகிறதா என்பது குறித்தும் அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு ஹோட்டல் அருகில், நகராட்சி குப்பை சேகரிக்கும் இடத்தில், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, அப்பகுதியில் பொதுமக்கள் குப்பைகளை கொட்டாமல் இருப்பதற்கு, தொடர்புடைய அலுவலர்களிடம் அறிவுறுத்தினார். மேலும் தமிழ்நாடு ஹோட்டல் அருகில், குப்பைகள் குவிந்திருப்பதை, அவற்றை நீக்கிவிட்டு மரக்கன்றுகள் நட்டு, பூங்கா அமைத்திட நகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.இந்நிகழ்வுகளில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், உதவிப் பொறியாளர் (நகராட்சி) கலியக்குமார், சுகாதார ஆய்வாளர்கள் மகாமுனி, பாபு, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்மதியழகன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×