என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் கைது
- சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- குடும்பத்தாரை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குயை சேர்ந்த கருப்பையா மகன் ரமேஷ் (வயது35). இவர் 14 வயது சிறுமிக்கு காதல் கடிதம் கொடுத்து பாலியல் தொந்தரவு கொடுததுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சிறுமியை நான் கூப்பிடும் இடத்திற்கு வரவேண்டும். இல்லை என்றால் உனது குடும்பத்தாரை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இது குறித்து சிறுமியின் தந்தை ஆலங்குடி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில், போலீசார் ரமேசை போக்சோவில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






