search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறுமியை திருமணம் செய்த வாலிபர்  போக்சோவில் கைது
    X

    சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது

    • லோகநாதன் (வயது 22). இவருக்கும், 17 வயது சிறுமிக்கும் பெற்றோர் முன்னிலையில் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது
    • கடந்த 27-ந் தேதி புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை இலுப்பூர் அருகே வலையப்பட்டியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மகன் லோகநாதன் (வயது 22). இவருக்கும், 17 வயது சிறுமிக்கும் பெற்றோர் முன்னிலையில் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.

    இந்நிலையில் கடந்த 27-ந் தேதி புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு அலுவலர் ரமா பிரியாவிடம், சிறுமிக்கு குழந்தை பிறந்தது குறித்து டாக்டர் புகார் தெரிவித்தார்.

    இதனைத்தொடர்ந்து ரமா பிரியா கீரனூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் லதா விசாரணை நடத்தி சிறுமியை திருமணம் செய்த லோகநாதன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×