என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
    X

    தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

    • தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
    • கூலி வேலை பார்த்து வந்தார்

    புதுக்கோட்டை

    காரைக்குடி கழனிவாசலை சேர்ந்தவர் ஷேக் சுல்தான் (வயது 40). இவர் ஆதனூர் அருகே கோவில்பட்டியில் கூலி வேலை பார்த்து வந்தார். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மன உளைச்சலில் இருந்து வந்த ஷேக் சுல்தான் நேற்று முன்தினம் அந்த பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து திருமயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×