search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வழிபறி சம்பவத்தில் இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த பெண் காயம்
    X

    வழிபறி சம்பவத்தில் இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த பெண் காயம்

    • வழிபறி சம்பவத்தில் இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த பெண்ணுக்கு காயம் ஏற்பட்டது.
    • மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலையை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி நந்தினி(வயது23). சம்பவதன்று நந்தினி தனது கணவர் பாண்டியனை புதுக்கோட்டை பேரூந்து நிலையத்தில் இறக்கிவிட்டு விட்டு வீடு நோக்கி தனது இருச்சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது செல்லுக்குடி அருகே வந்தபோது பின்னால் இருச்சக்கர வாகனத்தில் வந்த இருவர் நந்தினி அணிந்திருந்த நகைகளை பறிக்க முயன்றுள்ளனர். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் நந்தினிக்கு கை, கால்கள் காயமடைந்தன. இதனை பார்த்த அப்பகுதியில் வந்தவர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து வந்த புகாரின் பேரில் திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறி செய்ய முயன்ற இருவரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×