என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வழிபறி சம்பவத்தில் இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த பெண் காயம்
Byமாலை மலர்4 July 2022 8:37 AM GMT
- வழிபறி சம்பவத்தில் இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த பெண்ணுக்கு காயம் ஏற்பட்டது.
- மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலையை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி நந்தினி(வயது23). சம்பவதன்று நந்தினி தனது கணவர் பாண்டியனை புதுக்கோட்டை பேரூந்து நிலையத்தில் இறக்கிவிட்டு விட்டு வீடு நோக்கி தனது இருச்சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது செல்லுக்குடி அருகே வந்தபோது பின்னால் இருச்சக்கர வாகனத்தில் வந்த இருவர் நந்தினி அணிந்திருந்த நகைகளை பறிக்க முயன்றுள்ளனர். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் நந்தினிக்கு கை, கால்கள் காயமடைந்தன. இதனை பார்த்த அப்பகுதியில் வந்தவர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து வந்த புகாரின் பேரில் திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறி செய்ய முயன்ற இருவரை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X