என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீக்குளித்து பெண் தற்கொலை
    X

    தீக்குளித்து பெண் தற்கொலை

    • தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    • அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்

    புதுக்கோட்டை:

    புதுக்விகோட்ராடை மாவட்டம் விராலிமலை அருகே தேராவூர் மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் அண்ணாமலை மகன் அழகர். மனைவி உமாதேவி (வயது 35). இவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் உமா தேவியை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உமாதேவி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×