என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாக்காளர் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
    X

    வாக்காளர் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

    • வாக்காளர் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடந்தது
    • வருவாய் கோட்டாட்சியர் தொடங்கிவைத்தார்

    புதுக்கோட்டை:

    வாக்காளர் வரைவு பட்டியல் தேர்தல் ஆணையம் வெளியிட்டதை தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வருவாய் துறையின் சார்பாக புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் உள்ள பொன் புதுப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி மற்றும் பள்ளி தலைமையாசிரியர் நிர்மலா சைக்கிள் பேரணியை துவக்கி வைத்தார்.

    இதில் பொன்னமராவதி வட்டாட்சியர் பிரகாஷ் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் பொன்னமராவதி காவல் ஆய்வாளர் தனபாலன் , கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்டோர் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டனர் பள்ளி மாணவர்கள் தங்களது இருசக்கர வாகனங்களில் பொன்னமராவதி புதுப்பட்டி வலையபட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருசக்கர வாகனங்களில் சென்று வாக்காளர் விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தினர் .

    Next Story
    ×