என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வருமுன் காப்போம் மருத்துவ முகாம்
    X

    வருமுன் காப்போம் மருத்துவ முகாம்

    • ஆவுடையார் கோவில் அருகே வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது
    • முகாமில் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் எக்ஸ்ரே, இ.சி.சி. போன்ற மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது

    அறந்தாங்கி,

    புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா அரிமளம் ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளாளவயல் கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு திருவாகுடி ஊராட்சி மன்ற தலைவர் கலா கருப்பையா தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் அறந்தாங்கி எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் கலந்துகொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். முகாமில் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் எக்ஸ்ரே, இ.சி.சி. போன்ற மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது. மேலும் நோயாளிகளை கண்டுபிடித்து அவர்களுக்கு உடனடி தீர்வு மற்றும் நீண்டகால தீர்வு சம்பந்தமாக அறிவுரைகளும் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் மகப்பேறு மருத்துவர்,கண் மருத்துவர்,அறுவை சிகிச்சை நிபுணர்' பொது மருத்துவர், பல் மருத்துவர் போன்ற பல்வேறு பிரிவு மருத்துவர்கள் பரிசோதனை மற்றும் சிகிச்சை அளித்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு சுகாதாரம் குறித்த விழிப்புணர்வும், டெங்கு, மலேரியா காய்ச்சலை தடுக்கும் வழிமுறைகளும் அறிவுறுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் அரிமளம் ஒன்றிய ஒன்றியக்குழு தலைவர் மேகலா முத்து ,ஒன்றியக் குழு உறுப்பினர் கணேசன்,அறந்தாங்கி காங்கிரஸ் நகரச் செயலாளர் நகரச் செயலாளர் வீராசாமி ,நகர மன்ற உறுப்பினர் கிருபாகரன், உள்ளிட்ட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×