என் மலர்
உள்ளூர் செய்திகள்

இந்திய ஐக்கிய விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
- பாசன வாய்க்கால்களை தூர் வாரிட கோரிக்கை
- தாசில்தாரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது
ஆலங்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, பாலையூர் கன்மாயில் சின்னமடை, பெரியமடை, கோயில் மடை, ராவுத்தர் மடை, ஐயா மடை உள்ளிட்ட பாசன வாய்க்கால்களை சர்வே செய்து தூர்வாரி சொப்பனிடக் கோரி இந்திய ஐக்கிய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் வேலன் தலைமை தாங்கினார்.நல்லதம்பி, சேகர், சக்திவேல், சிதம்பரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் மாவட்ட துணைச் செயலாளர் சொர்ணகுமார் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், விவசாய சங்க மாவட்ட செயலாளர் தங்கராஜ், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் அம்பிகாபதி ஆகியோர் ஆர்ப்பாட்டம் குறித்து பேசினர்.மாதர் சங்க மாவட்ட தலைவர் சரஸ்வதி, புதுக்கோட்டை நகர செயலாளர் ரமேஷ், கலை இலக்கிய மன்ற பொறுப்பாளர் வெங்கடேஷ், மாவட்ட குழு உறுப்பினர்கள் மணி, செல்லப்பா, சாகுல் ஹமீது, சாம்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு ஆலங்குடி வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.






