என் மலர்
உள்ளூர் செய்திகள்

2 வீடுகளில் இருசக்கர வாகனங்கள் திருட்டு
- 2 வீடுகளில் இருசக்கர வாகனங்கள் திருட்டு நடந்துள்ளது.
- போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்து இருந்தனர்
புதுக்ேகாட்டை:
புதுக்கோட்டையில் நாரிமேடு பகுதியில் நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. 42 பிளாக்களில் 1920 வீடுகள் உள்ளது. இங்கு தற்போது சிறிது சிறிதாக பயனாளிகள் குடியிருக்க தொடங்கியுள்ளனர். ஏற்கனவே அப்பகுதியில் குடியிருப்போர் நலச் சங்கங்கள் தொடங்கப்பட்டுள்ளது. அவற்றின் மூலம் காவல் சூப்பிரெண்டுக்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்து இருந்தனர்.இதை ஏற்றுக்கொண்டு காவல் சூப்பிரெண்டு வந்திதாபாண்டே இரவு நேரத்தில் திருக்கோகர்ண போலீசாரை ரோந்து பணியில் ஈடுபடுத்த உத்தரவிட்டார்.அதை தொடர்ந்து போலீசாரும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றும் போலிசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் பிளாக் எண்.17ல் தனியார் கடையில் வேலை பார்க்கும் கணேசன் என்பவர் தனது சென்சார் பைக்கை வீட்டின் முன் நிறுத்தி இருந்தார். அதை காலையில் பார்க்கும் போது காணாமல் போனது கண்டு திடுக்கிட்டார். இதே போல் எதிரே உள்ள பிளாக் எண்.18ல் வெண்ணிலா என்பவருக்கு சொந்தமான பைக் நிறுத்தி வைக்கப்பட்டதும் காணாமல் போயுள்ளது. ஒரே இரவில் அடுத்தடுத்த பிளாக்குகளில் இருச்சக்கர வாகனங்கள் காணாமல் போனது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சில தினங்களுக்கு முன் அதே பகுதியில் இருச்சக்கர வாகனத்தை திருடிய மர்ம நபர்கள் காட்டு பகுதியில் போட்டு விட்டு சென்றது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவத்தில் மாவட்ட காவல் நிர்வாகம் தனிகவனம் செலுத்தி குற்றவாளிகளை பிடித்து இப்பகுதி மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும்படி செய்ய வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.






