என் மலர்
உள்ளூர் செய்திகள்

இந்த மாதம் விழிப்புணர்வு மாதமாக கடைபிடிப்பு
- இந்த மாதம் விழிப்புணர்வு மாதமாக கடைபிடிக்கப்படுகிறது.
- பேரிடர் மேலாண்மை தொடர்புடைய கட்டுரைகள்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
புதுக்கோட்டை மாவட்டத்தில் பேரிடர் அபாயங்கள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அனைத்து கிராமத்திலும் இன்று முதல் 30-ந் தேதி வரை பேரிடர் விழிப்புணர்வு மாதமாக கடைபிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே, இதன் ஒரு பகுதியாக பொதுமக்கள் மற்றும் அலுவலர்களிடமிருந்து 15 - தலைப்புகளில் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.
பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு தொடர்பான கட்டுரையின் 15-தலைப்புகள், கட்டுரையின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் ஆகியவை புதுக்கோட்டை மாவட்ட வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் மற்றும் அலுவலார்கள் தங்கள் கட்டுரைகளை வரும் 25-ந் தேதிக்குள் சமர்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மேற்படி கட்டுரைகளில் சிறந்த மூன்று கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டு முதல்பரிசாக ரூ.5000-, இரண்டாம் பரிசாக ரூ.3000 மற்றும் மூன்றாம் பரிசாக ரூ.2000 வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.






