என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நெல் மண்டியில் ரூ.3 லட்சம் திருட்டு
- பொன்னமராவதி நெல் மண்டியில் ரூ.3 லட்சம் திருட்டு நடைபெற்று உள்ளது
- கண்கா ணிப்பு கேமராவில் பதி வான காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை
பொன்னமராவதி,
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுக்கா கோட்டை யூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி பாலமு ருகன் (வயது 51).இவர் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னம ராவதிக்குட்பட்ட காட்டுப்பட்டி ஊராட்சி தெய்வானைநகர் எதிரே புதுக்கோட்டை செல்லும் சாலையில் நெல் கமிஷன் மண்டி அமைத்து வியாபா ரம் செய்து வருகிறார்.இந்த நிலையில் மகன் திருமணத்திற்கு பத்திரிகை வைப்பதற்காக பாலமுருகன் வெளியூர் சென்றதால், அவரது மகள் சண்முகப்பி ரியா கடையை பார்த்து வந்தார்.சண்முகப்பிரியா வியா பாரத்தை முடித்து விட்டு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார்.வழக்கம் போல் காலை யில் கடையை சண்முகப்பி ரியா கடையை திறந்துள்ளார். அப்போது கடையில் இருந்த கல்லாபெட்டி உடைக்கப்ப ட்டும், கண்காணிப்பு கேமரா காட்சி பதிவாகும் பெட்டியும் திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.மேலும் கல்லாவில் இருந்த ரூ.3 லட்சத்தையும், ஹார்ட் டிஸ்க்கையும் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்து.இது குறித்து அவர் பால முருகனுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். இதை யடுத்து பாலமுருகன் கடைக்கு வந்து பார்வையிட்டார்.பின்னர் இச்சம்பவம் குறித்து அவர் பொன்னம ராவதி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் ரமேஷ் தலைமை யில் காவல் உதவி ஆய்வா ளர் மணிகண்டன், காவலர் விக்னேஷ் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரே கைகள் பதிவு செய்யப் பட்டது.மேலும் அப்பகுதியில் உள்ள டைகளில் கண்கா ணிப்பு கேமராவில் பதி வான காட்சிகளின் அடிப்படையில் ரூ. 3 லட்சத்தை திருடி சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடிவரு கின்றனர். இந்த கொள்ளை சம்ப வம் பொன்னமராவதி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்