search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாகனத்திலிருந்து தவறி விழுந்தவர் சாவு
    X

    வாகனத்திலிருந்து தவறி விழுந்தவர் சாவு

    • வாகனத்திலிருந்து தவறி விழுந்தவர் உயிரிழந்தார்.
    • திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது.

    புதுக்கோட்டை:

    ஆலங்குடி அருகே உள்ள மாங்கோட்டை மேலப்பட்டியை சேர்ந்த குழந்தைவேல் மகன் பாலமுருகன் (வயது 34) விவசாயியான இவருக்கு, திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இவர் இரு சக்கர வாகனத்தில் மாங்கோட்டையிலிருந்து எம்-தெற்கு தெரு வழியாக சென்ற போது நிலைதடுமாறி கீழே விழுந்தார்.இதில் பலத்த காயம் அடைந்த அவரை அப்பகுதியினர் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பாலமுருகன் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்வம் குறித்து ஆலங்குடி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×