என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி
    X

    மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி

    • மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலியானார்.
    • காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்தார்

    புதுக்கோட்டை

    விராலிமலை வடக்கு தெருவை சேர்ந்தவர் யோகேஸ்வரன் (வயது 27). இவர் நேற்று முன்தினம் விராலிமலை அருகே மலைக்குடிபட்டியில் உள்ள தனது நண்பரை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு இலுப்பூர்- விராலிமலை சாலையில் திரும்பி சென்று கொண்டிருந்தார். ராஜகிரி பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே தவறி விழுந்துள்ளார். அதில் பலத்த காயமடைந்த யோகேஸ்வரனை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி யோகேஸ்வரன் நேற்று பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்."

    Next Story
    ×