என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேர்வில் தோல்வி அடைந்த  மாணவி  தற்கொலை
    X

    தேர்வில் தோல்வி அடைந்த மாணவி தற்கொலை

    • தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்டார்
    • மனவிரக்தியில் விபரீத முடிவு

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட் டம், கந்தர்வகோட்டை தாலுகா அண்டனூர் கிராமத்தை சேர்ந்தவர் ரேணுகா. இவரது மகள் ஜெனிதா. இவர் கறம்பக்குடி அருகே உள்ள உறவினர் வீட்டில் தங்கி அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த பொதுத்தேர்வில் 2 பாடங்களில் தோல்வியடைந்தார். பின்னர் துணைத் தேர்வு எழுதினார். அதில் ஒரு பாடத்தில் தேர்ச்சிபெறவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த ெஜனிதா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுகொண்டார்.

    இதை கண்ட அவரது உறவினர்கள், அவரை மீட்டு கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென் றனர். அங்கு ஜெனிதாவை பரிசோதித்த டாக்டர்கள், வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வந்த புகாரின் பேரில் கறம்பக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×