என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

- ஆலங்குடியில் மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது
- கலெக்டர் மெர்சி ரம்யா உதவி உபகரணங்களை வழங்கினார்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அரசு ஆண்கள்மேல்நிலைப்பள்ளியில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடைபெற்ற மாற்றுத்தி றனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை, மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தொடங்கி வைத்து, மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு உதவி உபகரணங்களை வழங்கினார்.பின்னர் மாவட்ட கலெக்டர் கூறும்போது, இம்முகாமில் 39 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3 லட்சத்து 56 ஆயிரத்து 500 மதிப்பிலான பல்வேறு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இம்முகாமில், திருவரங்குளம் ஒன்றியக்குழுத் தலைவர் வள்ளியம்மை, தங்கமணி, ஆலங்குடி பேரூராட்சித் தலைவர் மு.ராசி முருகானந்தம், சுகாதாரப்பணிகள் அறந்தாங்கி துணை இயக்குநர் நமச்சிவாயம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் எஸ்.உலகநாதன், பேரூராட்சி துணைத்தலைவர் ராஜேஸ்வரி பழனிகுமார், உதவித் திட்ட அலுவலர் தங்கமணி, வட்டார மருத்துவ அலுவலர் மரு.ராம்சந்தர், பேரூராட்சி உறுப்பினர் காஞ்சனா செல்வராஜ், ஆசிரியர் ஞானபிரகாசம், முடநீக்கு வல்லுநர் எஸ்.ஜெகன்முருகன், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
