என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆலங்குடி அருகே சித்த மருத்துவ முகாம்
- ஆலங்குடி அருகே சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது
- அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் கைகுறிச்சி ஊராட்சியில் திருவரங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவ அலுவலகம் சார்பில் சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது. கைகுறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் ரெங்கநாயகி செல்வம் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். திருவரங்குளம் சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் ரெங்கநாயகி, டாக்டர் தேவி ஆகியோ சிகிச்சை அளித்தனர். சித்த முகாமில் அப்பகுதியை சேர்ந்த 200-க்கும் அதிகமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. மேலும் சித்த மருத்துவம் சார்ந்த சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.
Next Story






