என் மலர்
உள்ளூர் செய்திகள்

600 கிலோ ரேசன் அரிசி கடத்தியவர் கைது
- 600 கிலோ ரேசன் அரிசி கடத்தியவர் கைது செய்யப்பட்டார்
- வாகனத்துடன் அரியை பறிமுதல் செய்தனர்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறையினரின் சோதனையில் சட்ட விரோதமாக கடத்தி வரப்பட்ட 600 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு காவல்துறை துணை கண்காணிப்பாளர் உத்தரவுபடி சப் இன்ஸ்பெக்டர் செல்வமணி மற்றும் போலீசார் , புதுக்கோட்டை திருவப்பூர் ரெயில்வே கேட் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே வந்த ஆம்னி வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் 600 கிலோ ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அரிசியையும், ஆம்னி வேனையும் பறிமுதல் செய்த போலீசார், வேனை ஓட்டிவந்த கீழாத்துரையை சேர்ந்த ரெத்தினம் மகன் செல்வம் (வயது 59) என்பவரை கைது செய்தனர். கடத்தி வரப்பட்டு எங்கு கொண்டு செல்லப்படுகிறது என அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






