search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிடாரி அம்மன் கோயிலில் தேரோட்டம்
    X

    பிடாரி அம்மன் கோயிலில் தேரோட்டம்

    • பிடாரி அம்மன் கோயிலில் தேரோட்டம்
    • பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே அம்மன்குறிச்சி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் உள்ள பிடாரி அம்மனுக்கு ஆடித்திருவிழா கடந்த 2ம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் மண்டகப்படிதாரர்கள் சார்பில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது. விழாவையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைக்கு, பின்னர் அலங்காரிக்கப்பட்ட பிடாரி அம்மன் தேரில் எழுந்தருளியபின் பக்தர்கள் வடம் பிடிக்க புறப்பட்ட தேர் முக்கிய வீதிகளில் வலம் வந்து தேரடியில் நிலையை அடைந்தது.

    பிடாரி அம்மனுக்கு அலங்கரிக்கப்பட்ட பூக்கள் , மாலைகள் பக்தர்களை நோக்கி வீசப்பட்ட அவற்றை அம்மனின் அருள்பிரசாம் என போட்டி போட்டுக்கொண்டு பக்தர்கள் பிடித்து வீட்டிற்க்கு கொண்டு சென்றனர்.

    விழாவில் அம்மன்குறிச்சி, சொக்கநாதபட்டி, ஆலவயல், கண்டியாநத்தம், நகரப்பட்டி, கல்லம்பட்டி மற்றும் சுற்றுக்கிராம மக்கள் பங்கேற்று வழிபட்டனர். புதுக்கோட்டை மாவட்ட அறநிலையத்துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பாதுகாபபில் தீயணைப்பு துறையினர், காவல்துறையினர் ஈடுபட்டனர்.

    Next Story
    ×