என் மலர்
உள்ளூர் செய்திகள்

பிடாரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
- பிடாரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
- திருப்பணிகள் முழுமை பெற்றது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா பொன்னன் விடுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பிடாரி அம்மன் கோவிலில் பரிவார தெய்வங்களுக்கான ஆலயங்கள் அமைக்கப்பட்டு திருப்பணிகள் முழுமை பெற்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது. யாஹசாலையை தொடர்ந்து மந்திரம் முழங்க புனித நீர் நிரம்பிய குடங்களை தலையில் சுமந்தவாறு சிவச்சாரியார்கள் செல்ல, கிராம மக்கள் ஊர்வலமாக பின்தொடர மேளதாளங்களுடன் கருடபகவான் வானத்தை வட்டமிட புனிதநீர் கோபுர கலசம் மற்றும் கருவறை கலசங்களி ல் ஊற்றப்பட்டது. அப்போது வாணவேடிக்கைகளும் மேலதாளங்கள் முழங்கின. கும்பாபிஷேகத்தை காண அப்பகுதியை சேர்ந்த பல்லாயிரக்க ணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.
Next Story






