search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீட்டுக்கு தீ வைத்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீசில் புகார்
    X

    வீட்டுக்கு தீ வைத்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீசில் புகார்

    • வீட்டுக்கு தீ வைத்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீசில் புகார் அளிக்கப்பட்டது
    • குடும்பத்தையே ஊரை விட்டு ஒதுக்கி வைத்த அவலம்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கட்டையாண்டிபட்டியைச் சேர்ந்தவர் பழனியப்பன் (வயது 48). இவரது மனைவி செல்வி (46). இவர்களுக்கு பொன்னழகு (28), போதுமணி (26), முத்துலட்சுமி (24) ஆகிய மூன்று மகள்களும் ஆனந்த் (23) என்ற ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் இவரது மூன்றாவது மகள் முத்துலட்சுமி (24) என்பவர் தனது வீட்டிற்கு தெரியாமல் மாற்று சமூகத்தை சேர்ந்த காதலித்து கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார்.

    இதனால் பழனியப்பன் குடும்பத்தினரை கட்டையாண்டிபட்டி கிராமத்தில் ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பழனியப்பன் குடும்பத்தினரை ஊரில் சேர்த்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கடந்த ஜூன் மாதம் பொன்னமராவதி காவல் நிலையத்தில் பழனியப்பன் மனு கொடுத்துள்ளார். இந்த புகார் மனுவுக்கு எந்தவித நடவடிக்கையும் காவல்துறை எடுக்காததால் கடந்த ஜூலை மாதம் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு பழனியப்பன் மனு கொடுத்துள்ளார். ஆனால் இது நாள் வரை அவரது கிராமத்தில் பழனியப்பனை ஊரில் சேர்த்துக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று கட்டையாண்டிபட்டி ஊரணி அருகே உள்ள பழனியப்பனின் களத்து வீட்டுக்கு யாரோ மர்ம நபர்கள் தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதனையடுத்து அந்தக் களத்து வீட்டிற்கு அருகாமையில் இருந்தவர்கள் தங்கள் வீட்டில் பராவாமல் இருக்க தண்ணீர் ஊற்றி அந்த தீயை அணைத்தனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் பழனியப்பனின் களத்து வீடு முழுமையாக தீயில் எரிந்து நாசமானது.

    பழனியப்பன் பொன்னமராவதி காவல் நிலையத்திற்கு சென்று தனது களத்து வீட்டை மர்ம நபர்கள் யாரோ தீ வைத்து சென்றதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு தன்னை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ள நிலையில் மீண்டும் தன்னையும் தனது குடும்பத்தாரையும் ஊரில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு கொடுத்துள்ளார். இந்த சம்பவம் பொன்னமராவதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×