search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதிதாக மின்மாற்றி அமைக்க எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் மனு
    X

    புதிதாக மின்மாற்றி அமைக்க எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் மனு

    • புதிதாக மின்மாற்றி அமைக்க எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் மனு அளித்தனர்.
    • அடிக்கடி பழுது ஏற்படுகிறது

    புதுக்கோட்டை:

    பொன்னமராவதி இந்திராநகர் ஈஸ்வரமூர்த்தி ஊரணி பகுதியில் குறைந்த மின்அழுத்த விநியோகம் இருப்பதால் உடனடியாக அப்பகுதியில் புதிய மின்மாற்றி அமைக்கவேண்டும் என எஸ்டிபிஐ கட்சி மற்றும் பொதுமக்கள் சார்பில் வலியுறுத்தி மின்வாரியத்திற்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த மனுவில், பொன்னமராவதி இந்திராநகர், ஈஸ்வரமூர்த்தி, ஊரணி அருகே அமைந்துள்ள மூன்று தெருக்களிலும் குறைந்த மின் அழுத்தம் இருப்பதால் மாலை நேரங்களில் இப்பகுதியில் உள்ள வீடுகளில் தொலைக்காட்சி, குடிநீர் மோட்டார் உள்ளிட்ட மின்சாதனங்கள் இயக்க இயலவில்லை. அவ்வாறு இயக்கினாலும் அடிக்கடி பழுது ஏற்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் மிகவும் மனஉளைச்சலுக்கு ஆளாகி வருகிறார்கள். எனவே குறைந்த மின் அழுத்த விநியோகத்தை சீரமைக்கும் வகையில் உடனடியா இப்பகுதியில் புதிதாக மின்மாற்றி அமைக்கவேண்டும் என்று ெ தரிவித்திருந்தனர்.

    Next Story
    ×