என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கந்தர்வகோட்டையில் நம்ம ஊரு சூப்பர் திட்டம் விழிப்புணர்வு முகாம்
    X

    கந்தர்வகோட்டையில் நம்ம ஊரு சூப்பர் திட்டம் விழிப்புணர்வு முகாம்

    • கந்தர்வகோட்டையில் நம்ம ஊரு சூப்பர் திட்டம் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது
    • விழிப்புணர்வு முகாம் மற்றும் பேரணி ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி தலைமையில் நடைபெற்றது.

    கந்தர்வகோட்டை:

    கந்தர்வகோட்டை ஊராட்சி மன்றம் சார்பில் நம்ம ஊரு சூப்பர் திட்டத்தின் கீழ் சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வு முகாம் மற்றும் பேரணி ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி தலைமையில் நடைபெற்றது. தமிழக அரசின் சிறப்பு திட்டமான நம்ம ஊரு சூப்பர் திட்டத்தின் கீழ் ஊராட்சியில் தூய்மை பணி, மருத்துவ பரிசோதனை மற்றும் நலத்திட்டம், சுய உதவி குழு உறுப்பினர்கள் வாயிலாக கழிவு பொருட்களை கையாள்வது தொடர்பான விழிப்புணர்வு, நெகிழி பொருட்களுக்கு பதிலாக மாற்றுப் பொருட்கள் பயன்படுத்துதல் உள்ளிட்ட சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வு பொதுமக்களிடம் ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பார்த்திபன், சுகாதார ஒருங்கிணைப்பாளர் விஜயலட்சுமி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×