என் மலர்
உள்ளூர் செய்திகள்

அறந்தாங்கி பகுதிகளில் மிதமான மழை
- அறந்தாங்கி பகுதிகளில் மிதமான மழை பெய்தது
- இதனால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அறந்தாங்கி:
அறந்தாங்கி மற்றும் தா.பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் இளநீர், தர்பூசணி போன்ற குளிர்ச்சியூட்டும் பழச்சாறுகளை அருந்தி வெயிலின் தாக்கத்திலிருந்து தங்களை பாதுகாத்து வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு வெப்ப சலனம் காரணமாக திடீரென கோடை மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் இன்று காலை முதல் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story