என் மலர்
உள்ளூர் செய்திகள்

அமைச்சர்கள் மெய்யநாதன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வு
- திருவரங்குளம் அரசு பள்ளியில் அமைச்சர்கள் மெய்யநாதன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டனர்
- மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்திலும் ஆய்வு நடைபெற்றது
ஆலங்குடி,
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார்.
திருமயம் வட்டார கல்வி அலுவலகம் மற்றும் திருவரங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அவர் ஆய்வு செய்தார். மேலும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் உள்ள கோப்புகளை ஆய்வு செய்து, தலைமை ஆசின்யர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு நடந்து வருவதை பார்வையிட்டு, பணி மாறுதல் ஆணைகளை, ஆசின்யர்களுக்கு வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறும்போது:-
பள்ளிக் கல்வி துறை சார்பில் 234 தொகுதியிலும் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் ஆய்வுப் பணி மேற்கொண்டு அங்குள்ள குறைகள், ஆசின்யர்களின் கோன்க்கைகள் என்னென்ன என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக இந்த ஆய்வுப் பணி நடந்து வருகிறது.
இந்த ஆய்வின்போது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம் நூலகம் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது.
இதுபோன்று கள ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளும் போது, ஆசின்யர்களின் கோன்க்கைகள் குறித்து கேட்டு அறிந்து கொள்வதற்கு வசதியாக உள்ளது. கோன்க்கைகள் மட்டுமல்லாமல் என்னென்ன தேவைகள் என்பது குறித்தும் இந்த ஆய்வின் மூலமாக தென்ந்து கொள்ள முடிகிறது. இந்த ஆய்வில் பெறப்படும் ஆலோசனைகள் கருத்துக்கள் ஆகியவற்றை சென்னையில் நடைபெறும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கூட்டங்களில் விவாதிப்பதற்கு இது வசதியாக உள்ளது என்றார்.






