என் மலர்
உள்ளூர் செய்திகள்

லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது
- லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
- தனிப்படை போலீசார் நடவடிக்கை
புதுக்கோட்டை:
ஆலங்குடியில் லாட்டரி சீட்டுக்கள் விற்பதாக டிஎஸ்பி-க்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தனிப்படை போலீசார் பாரதிதாசன் சாலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தூத்துக்குடி மாவட்டம் தோப்புவளமும் ஊராட்சி சாத்தான் குளம் செல்வராஜ் மகன் சிவனேசன் (வயது 41) என்பவர் கேரளா லாட்டரி சீட்டுகளை டீ கடை ஒன்றில் வைத்து விற்றுக்கொண்டிருந்தார். இதனை பார்த்த தனிப்படை போலீசார், அவரை கைது செய்து ஆலங்குடி காவ ல் நிலையத்தில் ஒப்படைத்தனர் ஆலங்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லதா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Next Story






