என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

X
ஆலங்குடியில் லாட்டரி விற்றவர் கைது
By
மாலை மலர்29 Dec 2022 7:55 AM GMT

- ஆலங்குடியில் லாட்டரி விற்றவர் கைது செய்யபட்டார்
- லாட்டரி விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட இரு சக்கர வாகனம், செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர்
ஆலங்குடி:
ஆலங்குடியில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக மாவட்ட எஸ்.பி வந்தித பாண்டேவுக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் உதவி ஆய்வாளர் சிவகுமார் தலைமையிலான தனிப்படை போலீசார் காமராஜர் சிலை பகுதியில் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அங்கு ஆலங்குடி அருகே உள்ள புதுக்கோட்டை விடுதியை சேர்ந்த அய்யாக்கண்ணு மகன் தர்மலிங்கம் (வயது 38) என்பவர் மூன்று நம்பர் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டார். இதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், லாட்டரி விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட இரு சக்கர வாகனம், செல்போன், 4,140 ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து ஆலங்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஆலங்குடி போலீசார் விசாரணை செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து கந்தர்வகோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்ப்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
