search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆலங்குடி அருகே சாராயம் விற்றவர் கைது
    X

    ஆலங்குடி அருகே சாராயம் விற்றவர் கைது

    • ஆலங்குடி அருகே சாராயம் விற்றவர் கைது செய்யபட்டார்
    • தென்னந்தோப்பில் 15 லிட்டர் சாராயம் வைத்து விற்றுக்கொண்டிருந்தார்

    ஆலங்குடி:

    ஆலங்குடி மது விலக்கு போலீசார் பாத்தம்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். சம்பவத்தன்று பாத்தம்பட்டியை சேர்ந்த முண்டையா மகன் தங்கராஜ் (வயது42) என்பவர் வீட்டின் அருகே உள்ள தென்னந்தோப்பில் 15 லிட்டர் சாராயம் வைத்து விற்றுக்கொண்டிருந்தார். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் 15 லிட்டர் டின்னரில் இருந்த சாராயத்தை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். பின்னர் விசாரணையில் அவர் அவ்வபோது தோட்டத்தில் சாராய ஊறல் போட்டு விற்பனை செய்வது தெரியவந்தது. இந்நிலையில் ஆலங்குடி மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மணமல்லி காவல் நிலையம் அழைத்து வந்தனர். பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்து ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜயபாரதி முன்பு ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×