என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆலங்குடியில் மது விற்றவர் கைது
- ஆலங்குடியில் மது விற்றவர் கைது செய்யபட்டார்
- அவரிடம் இருந்த 13 மது பாட்டில் மற்றும் ரூ.4 ஆயிரத்தை பறிமுதல்செய்தனர்
ஆலங்குடி:
ஆலங்குடி பகுதியில் மது பாட்டில் கடத்தி விற்பதாக மாவட்ட எஸ்.பி. தனிப்படை உதவி ஆய்வாளர் பாலமுருகன் கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆலங்குடி அருகே உள்ள வெண்ணாவல்குடி மேற்கு தெருவை சேர்ந்த குமார் (வயது 50), ஆலங்குடி உள்கடை வீதி மதுக்கடை அருகே மது விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அவரை கைது செய்ய தனிப்படை போலீசார் அவரிடம் இருந்த 13 மது பாட்டில் மற்றும் ரூ.4 ஆயிரத்தை பறிமுதல்செய்து ஆலங்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து ஆலங்குடி சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ண மூர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story






