search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கருணாநிதி நினைவுநாள் ஊர்வலம்
    X

    கருணாநிதி நினைவுநாள் ஊர்வலம்

    • புதுக்கோட்டையில கருணாநிதியின் நினைவு ஊர்வலம் தி.மு.க. சார்பில் நடைபெற்றது
    • ஏராளமான தி.மு.க.வினர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்

    அறந்தாங்கி,

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டுமவுன ஊர்வலம் மற்றும் அவரின் உருவ படத்திற்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.தமிழககம் முழுவதும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி திமுகவினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அறந்தாங்கியில் நகரச் செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் மவுன ஊர்வலம் நடைபெற்றது.கலைஞர் மன்றத்திலிருந்து தொடங்கிய ஊர்வலம் பெரியகடைவீதி, கட்டுமாவடிச்சாலை முக்கம் வழியாக அண்ணா சிலையை அடைந்தது. அதனை தொடர்ந்து அங்கே அமைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அதே போன்று நாகுடியில் தெற்கு ஒன்றியச் செயலாளர் பொன்கணேசன் தலைமையில் கருணாநிதியின் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.நிகழ்ச்சியில் நகர்மன்றத்தலைவர் ஆனந்த்,ஒன்றியச் செயலாளர்கள் பொன்கணேசன், சீனியார், நகர்மன்றத் துணைத் தலைவர் முத்து, நகர கழக நிர்வாகிகள் பழனிச்சாமி, ராமசாமி, பிஎம்ஆர் ராஜேந்திரன், ராவுத்தர்கனி, அனந்தராமன், அருளாந்து, பழமாரியப்பன், சத்தியசீலன், செல்லத்துரை, வின்சென்ட்ராஜேந்திரன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மணிராஜன், மாவட்ட அணி அமைப்பாளர்கள் சக்திவேல், ஹரிவிமலாதி, நகர்மன்ற உறுப்பினர்கள் காசிநாதன், துளசிராமன், சரோஜா, பிச்சை முத்து, வட்ட கழக செயலாளர்கள் கைலாசம், தமிழ் மறைச் செல்வம், மதியழகன், ரமேஷ், காளிதாஸ், நசுருதீன், சுமங்கலி சாஜஹான், ரவி, மாவட்ட அணியின் துணை அமைப்பாளர்கள் அன்பழகன், சோம ஆறுமுகம், நாராயணன், ஆறுமுகம், வேணுகோபால், கருணாகரன், அடைக்கலராஜா, தமிழ் ராசு, நகர இளைஞர் அணி அமைப்பாளர் சேக் இஸ்மாயில், நகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் அய்யப்பன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×