என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கறம்பக்குடியில் அமையவுள்ள நீதிமன்ற கட்டிடம் ஆய்வு
    X

    கறம்பக்குடியில் அமையவுள்ள நீதிமன்ற கட்டிடம் ஆய்வு

    • கறம்பக்குடியில் அமையவுள்ள நீதிமன்ற கட்டிடம் ஆய்வு செய்தார்
    • பழைய தாலுகா அலுவலகமாக செயல்பட்டு வந்த பேரூராட்சி சமுதாயக்கூடத்தை ரூ.20 லட்சம் செலவு செய்து புதுப்பிக்கப்பட்டது

    கறம்பக்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகாவாக தரம் உயர்த்தப்பட்டு சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இருப்பினும் இங்கு நீதிமன்றம் இல்லை. இப்பகுதி பொதுமக்கள் ஆலங்குடியில் உள்ள நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். எனவே கறம்பக்குடியில் நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கரம்பக்குடியில் நீதிமன்றம் அமைப்பதற்காக பழைய தாலுகா அலுவலகமாக செயல்பட்டு வந்த பேரூராட்சி சமுதாயக்கூடத்தை ரூ.20 லட்சம் செலவு செய்து புதுப்பிக்கப்பட்டது. இந்த கட்டிடத்தில் தற்காலிகமாக உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் அமைய உள்ளது. இதனை மதுரை ஐகோர்ட் நீதிபதி சுரேஷ்குமார் நேரில் ஆய்வு செய்தார். மேலும் நீதிமன்றத்திற்கு நிரந்தர கட்டிடம் கட்டுவது குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிபதி அப்துல் காதர், வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், கறம்பக்குடி வட்டாட்சியர் ராமசாமி, கறம்பக்குடி பேரூராட்சித் தலைவர் முருகேசன், பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன், ஆத்மாசேர்மன் முத்துகிருஷ்ணன், பேரூராட்சி துணைத் தலைவர் நைனா முகமது ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×