என் மலர்
உள்ளூர் செய்திகள்

வளர்ச்சித்திட்டப் பணிகள் ஆய்வு
- வளர்ச்சித்திட்டப் பணிகள் ஆய்வு செய்யப்பட்டது.
- ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் மற்றும் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில், மேற்கொள்ளப்படும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையர் மரு.தாரேஸ் அஹமது, மாவட்ட கலெக்டர் கவிதா ராமு முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையர் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அந்தவகையில் புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் மற்றும் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில், மேற்கொள்ளப்படும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
கிராமப்புறங்களில் உள்ள ஏழை, எளிய மக்கள் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மக்களின் பயன்பாட்டிற்கு விரைந்து கொண்டுவரும் வகையில் அனைத்து அலுவலர்களும் பணியாற்ற வேண்டும் என ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையர் மரு.தாரேஸ் அஹமது, தெரிவித்தார்.
பின்னர்ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையர். மரு.தாரேஸ் அஹமது, பொன்னமராவதி ஒன்றியம், ஒலியமங்கலம் ஊராட்சியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பேரணி துவக்கி வைத்து, மகளிர் சுயஉதவிக்குழுவிர்.உற்பத்தி செய்த கைவினைப் பொருட்களை பார்வையிட்டார்.இந்த ஆய்வில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்நா.கவிதப்பிரியா, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குநர் ரேவதி, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி, உதவித் திட்ட அலுவலர் பழனிசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கராஜ், குமரன், பிரேமாவதி மற்றும் அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.






