என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருமயம் வட்டத்தில் நியாயவிலை கடைகளில் கலெக்டர் ஆய்வு
- நியாயவிலை கடைகளில் கலெக்டர் ஆய்வு நடத்தினார்
- நியாயவிலைக் கடைகளில் பொருட்கள் வழங்கிய பிறகு முறையாக செல்போனில் தகவல் அனுப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்யபட்டது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை கலெக்டர் கவிதா ராமு ரேஷன் கடைகளில் அதிரடி ஆய்வு நடத்தினார். 75-வது சுதந்திர தின அமுதப்பெருவிழா முன்னிட்டு மத்திய மற்றும் மாநில அரசின் உயர் அலுவலர்களால் நாடு முழுவதும் சுமார் 5,000 நியாயவிலைக் கடைகளின் செயல்பாட்டினை ஆய்வு செய்தும், அதன்மூலம் நியாயவிலைக் கடைகளை மேம்படுத்தவும், ஒரு நாடு ஒரு ரேசன் அட்டை மற்றும் பிரதம மந்திரியின் கல்யாண் அன்னயோஜனா திட்டத்தினையும் முழுமையாக அறிந்து கொள்ளவும், சரிபார்ப்பு பட்டியலின்படி ஆய்வு செய்யப்பட்ட நியாயவிலைக் கடைகளின் விவரங்களை உரிய இணைய முகப்பில் பதிவு செய்தல் தொடர்பாக, கலெக்டர் கவிதா ராமு திருமயம் வட்டத்தில் நகரத்துப்பட்டி மற்றும் கும்பங்குடி ஆகிய இரண்டு நியாயவிலைக் கடைகளை நேரில் சென்று பார்வையிட்டு அதிரடி ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வின்போது பொதுமக்களுக்கு நியாயவிலைக் கடைகளில் பொருட்கள் வழங்கிய பிறகு முறையாக செல்போனில் தகவல் அனுப்படுகிறதா என்பது குறித்தும், நியாயவிலைக் கடைகளில் முதலுதவிப்பெட்டி, கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, உள்கட்டமைப்பு தேவைகள், பயனாளிகள் அடிப்படை வசதிகள், நியாய விலைக் கடைகளில் அடிப்படையாக இருக்க வேண்டிய அத்தியாவசிய தளவாடங்கள், பொதுமக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கட்டணமில்லா எண், ஒரு நாடு ஒரு ரேசன் கார்டு திட்டம், கண்காணிப்புக் குழு உறுப்பினர்களின் பட்டியல் போன்ற விவரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்தும் கலெக்டர் கவிதா ராமு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின்போது, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கோ.இராஜேந்திர பிரசாத், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஆர்.கணேசன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.






