என் மலர்
உள்ளூர் செய்திகள்

லாரி மீது கார் மோதிய விபத்தில் 5 போலீசார் படுகாயம்
- புதுக்கோட்டை நமண சமுத்திரம் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் 5 போலீசார் படுகாயம்
- நமணசமுத்திரம் போலீசார் வழக்கு பதிந்து டாரஸ் லாரி டிரைவரிடம் விசாரணை
புதுக்கோட்டை,
சென்னை மாநகர காவல்துறை எஸ்.எஸ்.ஐ.க்கள் கிருஷ்ணமூர்த்தி(வயது 55), ரமேஷ்(58), ரவி(58) தலைமை காவலர் ராமமூர்த்தி(51), போலீஸ்காரர் செந்தில்குமார்(36) ஆகியோர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா பாதுகாப்பிற்காக ராமநாதபுரம் சென்றிருந்தனர். தேவர் ஜெயந்தி முடிந்த நிலையில் அவர்கள் ஒரு காரில் சென்னை திரும்பி உள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருச்சி - காரைக்குடி தேசிய நெடுஞ்சாலை, ஏனபட்டி விளக்கு ரோடு அருகே கார் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக எதிரே வந்த டாரஸ் லாரியின் மீது மோதி உள்ளது.இதில் காரில் பயணம் செய்த 5 பேரும் காயமடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற நமணசமுத்திரம் போலீசார், சென்னை போலீசாரை மீட்டு, திருமயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து நமணசமுத்திரம் போலீசார் வழக்கு பதிந்து டாரஸ் லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.






