என் மலர்
உள்ளூர் செய்திகள்

இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
- இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.
புதுக்கோட்டை:
இலுப்பூர் அருகே பாப்பாங்குடியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி குணா (வயது 23). இவர்களுக்கு திருமணமாகி ஒரு ஆண்டுஆகிய நிலையில் ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. குமார் சேலத்தில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் குணா கடந்த 2 மாதங்களாக தாய் வீட்டில் இருந்து வந்துள்ளார். பின்னர் கணவர் வீட்டிற்கு சென்ற அவர் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் கிடந்தார்.
இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக இலுப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து இலுப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குணாவிற்கு திருமணமாகி ஒரு ஆண்டே ஆவதால் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story






