என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுக்கோட்டையில் இளம் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய 9 பேர் கும்பல் கைது
    X

    புதுக்கோட்டையில் இளம் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய 9 பேர் கும்பல் கைது

    • புதுக்கோட்டையில் இளம் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய 9 பேர் கும்பல் கைது செய்யபட்டனர்
    • பணம், செல்போன்கள் பறிமுதல் செய்தனர்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை நகர் பகுதி மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் பாலியல் தொழில் அதிகரித்துள்ள தாகவும், வெளி மாநில ங்களில் இருந்து பெண்களை அழைத்து வந்து சிலர் பாலியல் தொழிலில் ஈடுபடு த்து வதாகவும் புதுக்கோ ட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு புகார்கள் வந்துள்ளன.இதன் அடிப்படையில் இது போன்ற சட்டவிரோத சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைக்க எஸ்.பி. வந்திதா பாண்டே உத்தரவிட்டதன் அடிப்படையில் இரு வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்த ப்பட்டது.

    புதுக்கோட்டை நகர காவல் நிலையத்துக்கு உட்பட்ட பெரியார் நகரில் பொறுப்பு இன்ஸ்பெக்டர் முகமது ஜாபர் தலைமையில் ஒரு வீட்டில் சோதனை மேற்கொண்டதில் வேலூர் காட்பாடியை சேர்ந்த ஒரு இளம் பெண்ணை அனிதா, நந்தினி, அகஸ்தீஸ்வரன், பாலமுருகன், ரவி, கண்ணன் ஆகியோர் விப ச்சாரத்தில் ஈடுபடுத்தியது தெரிய வந்தது. இதில் அகஸ்தீஸ்வரன் (வயது21), பாலமுருகன் (27) ஆகியோர் போலீஸ் பிடியில் சிக்கிக்கொண்டனர். மற்றவர்கள் தப்பி ஓடி விட்டனர்.

    இவர்களிடமிருந்து வாடிக்கையாளர்களுக்கு தூது விட பயன்படுத்திய நவீன செல்போன்கள், மோட்டார் சைக்கிள் ரொக்க பணம் ரூ.4,240 பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோன்று புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரம் சுப்பு நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் திருமயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் சோதனை மேற்கொண்டதில் கர்நாடக மாநிலம் பெங்களூர் தேனி மாவட்டம் போடி ஆண்டிப்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த மூன்று இளம் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது தெரிய வந்தது.

    இந்த சம்பவத்தில் புதுக்கோட்டையைச் சேர்ந்த மாலதி (40), ரவி( 52), முகமது(50) பேராவூரணியைச் சேர்ந்த கணபதி (33), ஆலங்குடியைச் சேர்ந்த வேலாயுதம் (46), திருமயத்தைச் சேர்ந்த ராமச்சந்திர (47), சேலத்தைச் சேர்ந்த சபரிநாதன் (40) ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து ரூ. 4680 ரொக்க பணம் 3 இரு சக்கர வாகனங்கள் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. குடியிருப்பு பகுதிகளில் விபச்சார கும்பல்கள் பிடிபட்ட சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மீட்கப்பட்ட அழகிகள் மற்றும் பெண்கள் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    Next Story
    ×