என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுக்கோட்டை மாவட்டத்தில் இலவச பன்னோக்கு மருத்துவ முகாம்
    X

    புதுக்கோட்டை மாவட்டத்தில் இலவச பன்னோக்கு மருத்துவ முகாம்

    • புதுக்கோட்டை மாவட்டத்தில் இலவச பன்னோக்கு மருத்துவ முகாம் 24-ந் தேதி நடக்கிறது
    • மருத்துவ முகாம்கள் வருகிற 24-ந் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்தப்பட உள்ளது.

    புதுக்கோட்டை:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் மூலம் 100 இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்களை பொதுமக்கள் பயனடையும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் நடத்திட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். அதன்படி. புதுக்கோட்டை மாவட்டத்தில் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், வயலோகம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், மறமடக்கி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும் இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் வருகிற 24-ந் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்தப்பட உள்ளது.

    இம்முகாம்களில் சிறப்பு மருத்துவ பிரிவுகளும், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளும் கலந்து கொள்கின்றனர். இம்முகாமில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மகளிர் மருத்துவம், கண், காது மூக்கு தொண்டை, பல் மருத்துவம், எலும்பியல் மருத்துவம் மற்றும் மனநலம் மருத்துவம் உள்ளிட்ட பன்னோக்கு மருத்துவ ஆலோசனைகள் சிறப்பு மருத்துவர்களால் வழங்கப்படவுள்ளது. இத்துடன் சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத சிகிச்சை மருத்துவர்களும் கலந்து கொள்வார்கள். நோய் கண்டறியப்பட்ட நபர்களுக்கு உரிய தொடர் சிகிச்சைகளை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு பதிவு பெற்ற முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தில் செயல்படும் மருத்துவமனைகள் மூலமாகவும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முகாம்களில் பொது மக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் மெர்சி ரம்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×