என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சத்துணவு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
    X

    சத்துணவு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

    • சத்துணவு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
    • கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது

    புதுக்கோட்டை:

    தமிழக முதல்வரின் காலை உணவுத்திட்டத்தினை அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் கொண்ட பள்ளி சத்துணவு மையங்களிலேயே சமைத்து மாணவர்களுக்கு வழங்க உத்தரவிடவேண்டும் என வலியுறுத்தி பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிளைத்தலைவர் எஸ்.செம்பன் தலைமைவகித்தார். நிர்வாகிகள் மகாராஜன், சீதாலெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சங்கத்தின் மாநில பொதுச்செயலர் மலர்விழி, மாவட்டத்துணைத்தலைவர் குமரேசன் ஆகியோர் கோரிக்கையை விளக்கிப்பேசினர்.

    Next Story
    ×