என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுக்கோட்டையில் 3-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை
    X

    புதுக்கோட்டையில் 3-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை

    • புதுக்கோட்டை மணல்குவாரி ஒப்பந்ததாரர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை 3-ம் நாளாக நடைபெற்றது
    • புதுக்கோட்டை மணல்குவாரி ஒப்பந்ததாரர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை 3-ம் நாளாக நடைபெற்றது

    புதுக்கோட்டை

    மணல் குவாரிகளில் நடைபெறும் சட்டவிரோத செயல்பாடு புகார் தொட ர்பா க மணல் குவாரி ஒப்ப ந்ததாரர்கள் வீடு அலுவ லகங்கள் மற்றும் அவர்கள் தொடர்புடைய இடங்களில் புதுக்கோட்டை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அமலாக்க த்துறை அதிகா ரிகள் நேற்று முன்தினம் அதிரடி சோதனை மேற்கொ ண்டனர்.

    புதுக்கோட்டையில் பிரபல தொழிலதிபரும் மணல் குவாரி ஒப்பந்ததா ரருமான முத்துப்பட்டி னத்தை சேர்ந்த ராமச்சந்தி ரன் வீடு, நிஜாம் காலனியில் உள்ள அவரது அலுவலகம் மற்றும் அவரது தொடர்பு டையவர்களின் இடங்களில் மொத்தம் 10 இடங்களில் சோதனை நடந்தது.

    இதில் கந்தர்வ கோட்டை அருகே புனல் குளம் பகுதி யில் சண்முகம் என்ப வரது குவாரி, புதுக்கோட்டை தனியார் கட்டுமான நிறுவ னம் ஆகிய இடங்களில் அமலா க்கத்துறை சோதனை நேற்று முன்தினம் நிறைவ டைந்தது.

    பின்னர் 2-வது நாளாக நேற்று நிஜாம் காலனி ராமச்சந்திரன் அலுவலகம், முத்துப்பட்டினத்தில் உள்ள அவரது வீடு, ஆடிட்டர் முருகேசன் அலுவலகம், ராமச்சந்திரனின் தொழில் கூட்டாளியான தொ ழிலதிபர் மணிவண்ணன் வீடு, வம்பன் அருகே மழவரா யன்பட்டியில் உள்ள ராமச்சந்திரனின் உறவினர் வீரப்பன் வீடு, கறம்பக்குடியில் குவாரி அதிபர் கரிகாலன் வீடு ஆகிய இடங்களில் இந்த சோதனை நடந்தது.

    இதில் நேற்று மதியம் மணிவண்ணன் வீட்டில் நடந்த சோதனை நிறைவடை ந்தது. ராமச்சந்தி ரனின் அலு வலகம் தவிர்த்து கரிகாலன் உள்ளிட்ட மற்ற வர்களின் வீடுகளில் நடந்த சோதனையும் நேற்று மாலை மற்றும் இரவில் நிறைவு பெற்றது.

    இன்று(வியாழக்கிழமை) 3-வது நாளாக ராமச்ச ந்திரனின் அலுவலகத்தில் அமலா க்கத்துறை அதிகாரி கள் முகாமிட்டு ள்ளனர்.

    புதுக்கோட்டையில் ராமச்சந்திரன் இல்லை. ஆகவே ஏற்கனவே சோத னையில் கிடைத்த ஆவ ணங்கள் அடிப்ப டையில் அவரிடம் விசாரணை நடத்த அமலா க்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்து காத்திருப்பதாக கூறப்படு கிறது.

    அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்ய ப்பட்டு ள்ளது. ஆகவே அவரை அதிகாரிகள் தொ டர்பு கொள்ள இயலாமல் தவி ர்த்து வருகின்றனர்.

    இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவ ணங்கள் குறித்து எந்த தகவ ல்களையும் அமலா க்கத்து றை அதிகாரிகள் அதிகா ரப்பூர்வமாக தெரிவிக்கவி ல்லை.

    Next Story
    ×