என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
    X

    மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம்- பரமத்தி வேலூர் செல்லும் சாலை உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு கரூர் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி இன பெண்களை பொது வெளியில் நிர்வாணமாக்கி பாலியல் வன்கொடுமை செய்து 80 நாட்களாகியும் நடவடிக்கை எடுக்காத, கலவரத்தை கட்டுப்படுத்தாத மணிப்பூர் மாநில அரசையும், மத்திய அரசையும் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். கண்டனம் ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பொறுப்பாளர்கள், கட்சியினர் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×