என் மலர்
உள்ளூர் செய்திகள்

அக்னிபாத் திட்டத்தை கைவிட கோரி ஆர்ப்பாட்டம்
- அக்னிபாத் திட்டத்தை கைவிட கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- காங்கிரசார் நடத்தினர்
புதுக்கோட்டை:
பொன்னமராவதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், ராகுல்காந்தி மீது பொய்வழக்கு போட்டு அமலாக்கத்துறை மூலம் விசாரணை செய்ததை கண்டித்தும் சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றது.
பொன்னமராவதி பேருந்துநிலையம் எதிரே நடைபெற்ற போராட்டத்திற்கு கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜீவானந்தம் தலைமைவகித்தார். திருமயம் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சுப்புராம் பங்கேற்று போராட்ட கோரிக்கைகளை விளக்கிப்பேசினார்.
போராட்டத்தில் மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி முழக்கமிடப்பட்டது. வட்டார காங்கிரஸ் தலைவர் வி.கிரிதரன், நகரத்தலைவர் எஸ்.பழனியப்பன், மாவட்ட துணைத்தலைவர் எஸ்பி.ராஜேந்திரன் நிர்வாகிகள் ச.சோலையப்பன், எஸ்பி.மணி, ஆர்.பாலுச்சாமி, நாட்டுக்கல் ராஜேந்திரன், வேலாயுதம், சரவணபவன் மணி, தங்கமணி, மணிமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






