என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அனைத்துதுறை அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை கூட்டம்
    X

    அனைத்துதுறை அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை கூட்டம்

    • அனைத்துதுறை அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
    • காலை உணவு திட்டம் செயலாக்கம்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் அரசு தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு செயல்படுத்துவது குறித்து முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது:

    தமிழ்நாடு முதலமைச்சர், காலை உணவு திட்டத்தை வரும் 15 -ந் தேதி அன்று துவக்கி வைக்கவுள்ளார். அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் முதற்கட்டமாக புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 8 தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இத்திட்டமானது செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திடும் வகையில் மாவட்ட கலெக்டரை தலைவராக கொண்டு மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தின் மூலம் குழந்தைகளின் உடலுக்கு தேவையான ஆற்றலை காலை உணவு அளிப்பதோடு, இரவு உணவுக்கு பின் ஏற்படும் நீண்ட இடைவெளியுடன் கூடிய பசியை தவிர்ப்பதாக அமையும். இத்திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், கூட்டுறவுத்துறைகள் இணைந்து செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தினை புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்திட அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும் என தெரிவித்தார்.

    இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநார் கருப்பசாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலார் மணிவண்ணன், மாவட்ட ஆட்சியரின் நர்முக உதவியாளர் (சத்துணவு) தேவிகா ராணி, நகராட்சி ஆணையர் நாகராஜன் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×