என் மலர்
உள்ளூர் செய்திகள்

பணம் வைத்து சூதாடிய 8 பேர் மீது வழக்கு
- பணம், சீட்டு கட்டுகள் பறிமுதல்
- பணம் வைத்து சூதாடிய 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
புதுக்கோட்டை:
அரிமளம் ஒன்றியம், கீழாநிலைக்கோட்டை அருகே முத்தூர் கலையரங்கம் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது 8 பேர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதை பார்த்த போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளார். அவர்களிடமிருந்து ரூ.400 மற்றும் சீட்டு கட்டுகள் பறிமுதல் செய்தனர்.
Next Story






