என் மலர்
உள்ளூர் செய்திகள்

இரு தரப்பினரிடையே மோதல்; 8 பேர் மீது வழக்கு
- இரு தரப்பினரிடையே மோதல்; 8 பேர் மீது வழக்கு பதியப்பட்டது
- துக்க நிகழ்ச்சிக்கு வந்தவர்கள்
புதுக்கோட்டை
ஆலங்குடி அருகே உள்ள கீரமங்கலம் மேற்கு பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஷேக் மைதீன் மனைவி சவுதம்ம்மாள் பீவியின் (வயது 55) இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவா ல் இறந்தார்.இந்நிலையில் சவுதம்மாள் பிவீ இறுதிச்சடங்கு முடிந்த மறுநாள் உறவினர்கள் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 6
பெண்கள் உட்பட 7 பேர் காயமடைந்தனர் இவர்கள் அனைவரும் அறந்தாங்கி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இங்கு இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வந்த புகாரின் பேரில் போலீசார் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






