என் மலர்
உள்ளூர் செய்திகள்

கந்தர்வக்கோட்டையில் பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்
- கந்தர்வக்கோட்டையில் பா.ஜ.க. ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
- தமிழக அரசை கண்டித்து நடந்தது
புதுக்கோட்டை:
கந்தர்வகோட்டையில் பா.ஜ.க. சார்பில் மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக அரசின் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் தவமணி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் விலைவாசி உயர்வை கண்டித்து நிர்வாகிகள் பேசினார்கள். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பார்வையாளர் பழ செல்வம் கலந்து கொண்டார் ஆர்ப்பாட்டத்தில் பாஜக நிர்வாகிகள் தங்கவேல், கார்த்திகேயன், அருண், கமலக்கண்ணன், பவுன்ராஜ், சந்திரன், முத்துமணி, ராம்குமார், முத்துக்குமார், கோவிந்தசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story






