என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆலங்குடியில் உண்டியல் திருட்டு
    X

    ஆலங்குடியில் உண்டியல் திருட்டு

    • ஆலங்குடியில் உண்டியல் திருட்டு போனது
    • புகாரின் படி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நகரில் உள்ள சிவன் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு நகரில் ஆங்காங்கே கடைகளில் வைத்து பொதுமக்கள் வருபவர்களிடம் உண்டியல் வசூல் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக நகரின் சில கடைகளில் உள்ள உண்டியல்களில் திருட்டுப் போவதாக கோவில் நிர்வாகிகள் சார்பில் கூறப்பட்டது. இந்நிலையில் வழக்கம்போல் தனியார் டைல்ஸ் கடையில் வைத்திருந்த உண்டியலில் சுமார் 4500 ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. இதை மர்மநபர் உண்டியலுடன் திருடி விட்டனர். இதுகுறித்து ஆலங்குடி போலீசில் புகார் மனு கொடுத்தனர். புகாரின் படி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


    Next Story
    ×