என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேலாயுதம்பாளையத்தில் பைக் திருட்டு
- வேலாயுதம்பாளையத்தில் நிறுத்தப்பட்ட பைக் திருட்டப்பட்டுள்ளது
- வழக்கு பதிந்து போலீசார் விசாரணை
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம்- பரமத்தி வேலூர் செல்லும் மெயின் ரோட்டில் உள்ள யாஸ் பில்டிங்கில் உள்ள முதல் தளத்தில் குடியிருந்து வருவர் அலிபாதுஷா (59).இவரது மகன் முகமது அசாருதீன் (29).இவர் புகளூர் காகித ஆலையில் நிரந்தர தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் காயிதா லையில் பணியை முடித்துவிட்டு தனது மோட்டார் பைக்கில் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். பின்னர் வீட்டிற்கு முன் தனது மோட்டார் பைக்கை நிறுத்தி பூட்டிவிட்டு வீட்டிற்குள் சென்று விட்டார்.பின்னர் காலை காகித ஆலைக்கு பணிக்கு செல்வதற்காக மோட்டார் பைக் பார்த்தபோது வீட்டின் முன் நிறுத்தி இருந்த மோட்டார் பைக்கை பார்த்தபோது அங்கு மோட்டார் பைக்கைகாணவில்லை. முகமது அசாருதீன்பல்வேறு பகுதிகளுக்கு சென்று மோட்டார் பைக்கை தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை.இது குறித்து முகமது அசாருதீன் வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்து மோட்டார் பைக்கை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.






