என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துணி பை
    X

    பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துணி பை

    • பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துணி பை வழங்கப்பட்டது
    • பேரிடர் மேலாண்மை முகமை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    புதுக்கோட்டை:

    தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை மற்றும் புதுக்கோட்டை மாவட்ட பேரிடர் மேலாண்மை முகமை சார்பில் கந்தர்வ–கோட்டை வார சந்தையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இடி, மின்னல், புயல் மற்றும் சூறாவளி காலங்களில் பொதுமக்கள் தங்களை எவ்வாறு தற்காத்துக் கொள்வது என்றும், மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை–கள் குறித்தும் விழிப்பு–ணர்வு வாசகங்கள் அடங்கிய துணிப்பை கந்தர்வகோட்டை வார சந்தையில் பொதுமக்களுக்கு விலை இல்லாமல் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கந்தர்வ–கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, ஒன்றிய குழு உறுப்பினர் ராஜேந்திரன், ஒன்றிய துணை தலைவர் செந்தா–மரை குமார், வருவாய் துறை அதிகாரிகள் சேகர், முரளி, உதவியாளர் செந்தில், வார்டு உறுப்பினர் மூக்கையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துணிப்பை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.


    Next Story
    ×