என் மலர்
உள்ளூர் செய்திகள்

வார சந்தையில் விழிப்புணர்வு முகாம்
- புதுக்கோட்டை வார சந்தையில் அரசு மகளிர் கலைக்கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு முகாம் நடத்தினர்
- மஞ்சப் பை வழங்கி நெகிழிப் பை விழிப்புணர்வு பற்றி வலியுறு த்தினார்கள்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் க லைக்கல்லூரி வரலாற்று துறை 3-ம் ஆண்டு மாணவியர்கள் கல்லூரி முதல்வர் ஜெ.சுகந்தி ஆலோசனையின்படி, இயற்கையை காப்போம் மீண்டும் மஞ்சப் பையை பய ன்படுத்துவோம் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு முகாமை புதுக்கோட்டை வாரசந்தைபகுதியில் நடத்தினர்.இந்த விழிப்புணர்வு முகாமில் வரலாற்று துறை ஆங்கில வழியை சேர்ந்த சுமார் 75 மாணவிகள் கலந்து கொண்டனர்.இந்த விழிப்புணர்வு முகாமில் இதில் நெகிழிப் பைகளை தவிர்த்து மஞ்சள் பையை பயன்படுத்த வேண்டும் என்று வாரசந்தையில் காய்கறி வியாபாரிகள் மற்றும் பொது மக்களுக்கு மாணவியர் மஞ்சப் பை வழங்கி நெகிழிப் பை விழிப்புணர்வு பற்றி வலியுறு த்தினார்கள். இதில் துறை பேராசிரியர்கள் எம். ஜோதி மற்றும் ஆர். தனலட்சுமி மற்றும் வரலாற்று துறை தலைவர் மு . காயத்ரி தேவி மற்றும் மாணவிகள் உள்பட பலர் கலந்து கொ ண்டனர்.