என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதியவர் மீது தாக்குதல்
    X

    முதியவர் மீது தாக்குதல்

    • சொத்து தகராறில் தாக்குதல்
    • படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை

    ஆலங்குடி,

    ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் சிதம்பரவிடுதியை சேர்ந்தவர் முத்தையா மகன் ராஜா (எ)ராஜசேகரன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த முருகன் மகன் கோவிந்தன் (வயது 73)ஆகிய இருவருக்கும் இடையே 12 ஆண்டுகளாக சொத்து தகராறு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு கல்லால் தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தில் கோவிந்தனுக்கு காயம் ஏற்பட்டு மயக்க நிலையில் கிடந்துள்ளார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் இதுகுறித்து கீரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று விசாரணை செய்தபோது கோவிந்தன் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிச்சை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    Next Story
    ×